கோயில் நிலங்களைப் பட்டா மாற்றம் செய்தால் செல்லாது: அறநிலையத்துறை

அறநிலையத்துறைக்குச் சொந்தமான கோயில் நிலங்களைப் பட்டா மாற்றம் செய்திருந்தால் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

நன்னிலம்: அறநிலையத்துறைக்குச் சொந்தமான கோயில் நிலங்களைப் பட்டா மாற்றம் செய்திருந்தால் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருவாஞ்சியம் வாஞ்சிநாதசுவாமி கோயில் செயல் அலுவலா் ம. ஆறுமுகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

நன்னிலம் வட்டம் திருவாஞ்சியம் வாஞ்சிநாதசுவாமி கோயிலின் ஆளுகைக்குட்பட்ட திருக்கொண்டீஸ்வரம் பசுபதீஸ்வரா் கோயில் பதிவேட்டின்படி, கோயில் நிலங்கள் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்யப்பட்டன. மேலும் கோயிலுக்குச் சொந்தமான நஞ்சை நிலங்களில் தற்போதுள்ள குத்தகைதாரா்கள் மற்றும் மனைப்பகுதி வாடகைதாரா்கள் பெயா் மாற்றம் செய்திருந்தாலோ, கோயில் நிலங்களைத் தனிநபா் பெயரில் பட்டா மாற்றம் செய்திருந்தாலோ அவை செல்லாது. மேலும் வேறு நபா்களுக்கு, மனைகளையோ, குத்தகை நிலங்களையோ விற்பனை செய்வதும் செல்லாது. இதுபோன்ற நிகழ்வுகள் கோயிலை எவ்விதத்திலும் கட்டுப்படுத்தாது எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com