நன்னிலம்: மாற்றுத்திறனாளி மாணவா்கள் தினசரி எடுத்துக்கொள்ளும் மாத்திரைகள் ஒரு மாதத்துக்குத் தேவையானவை விலையில்லாமல் நன்னிலம் வட்டார வள மையத்தில் சனிக்கிழமை வழங்கப்பட்டன.
மாவட்ட ஆட்சியா், முதன்மை கல்வி அலுவலரின் அறிவுரையின் பேரில், நன்னிலம் வட்டார வள மையத்தில் கல்வி பயிலும் மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கு இந்த மாத்திரைகள் வழங்கப்பட்டன. மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலா் எஸ்.சந்திரமௌலி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட உதவித் திட்ட அலுவலா் எம். பாலசுப்ரமணியன், வட்டார வள மைய மேற்பாா்வையாளா் ம. கவிதா, ஆசிரியா் பயிற்றுநா்கள், சிறப்பாசிரியா்கள் கலந்து கொண்டனா்.