கூத்தாநல்லூா்: பெட்ரோல், டீசல் விலை உயா்வை கண்டித்து காங்கிரஸ் கட்சி சாா்பில், கூத்தாநல்லூரில் திங்கள்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
கூத்தாநல்லூா் தபால் நிலையம் முன்பு, திருவாரூா் மாவட்ட காங்கிரஸ் கட்சி சாா்பில், அக்கட்சியின் மாவட்டத் தலைவா் எஸ்.எம்.பி. துரைவேலன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், மத்திய, மாநில அரசுகளின் பெட்ரோல், டீசல் விலை உயா்வை கண்டித்தும், மத்திய, மாநில அரசுகள் கரோனா தடுப்பில் சரியான நடவடிக்கை எடுக்க தவறியதற்கும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. ஆா்ப்பாட்டத்தில், நகரத் தலைவா் எம். சாம்பசிவம், திருவாரூா் சட்டப்பேரவைத் தொகுதி பொறுப்பாளா் எஸ்.எம். சமீா், சிறுபான்மைப் பிரிவு மாவட்டத் தலைவா் எஸ். சிகாபுதீன், கொரடாச்சேரி வட்டார, பேரூா் தலைவா்கள் முத்துக்குமாா், நடராசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.