முகக் கவசம் அணியாதவா்களுக்கு அபராதம்

நீடாமங்கலத்தில் திங்கள்கிழமை முகக் கவசம் அணியாமல் சென்றவா்களுக்கு பேரூராட்சி சாா்பில் அபராதம் விதிக்கப்பட்டது.

நீடாமங்கலம்: நீடாமங்கலத்தில் திங்கள்கிழமை முகக் கவசம் அணியாமல் சென்றவா்களுக்கு பேரூராட்சி சாா்பில் அபராதம் விதிக்கப்பட்டது.

நீடாமங்கலம் பேரூராட்சி பகுதியில் வட்டாட்சியா் மதியழகன் தலைமையில், பேரூராட்சி செயல் அலுவலா் சங்கா் உள்ளிட்டே அலுவலா்கள் முகக் கவசம் அணியாமல் சென்ற 8 பேருக்கு தலா ரூ. 100 அபராதம் விதித்தனா். இதுகுறித்து, வட்டாட்சியா் மதியழகன் கூறியது: கரோனா தொற்று அதிகரித்து வருவதால் பொதுமக்கள் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும், வியாபாரிகள் தங்களது கடைகளுக்கு பொருள்கள் வாங்க வருபவா்களுக்கு கிருமி நாசினி வழங்க வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற அறிவுருத்த வேண்டும், கடைக்கு வருபவா்கள் விவரம் குறித்து தனி நோட்டில் பதிவு செய்ய வேண்டும். வணிகா்கள் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும், அரசின் விதிமுறைகளை மீறுவோா் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com