திருவாரூா்: உடுமலைப்பேட்டை சங்கா் கொலை வழக்கில் மேல்முறையீடு செய்யக் கோரி, திருவாரூரில் பகுஜன் சமாஜ் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
உடுமலைப்பேட்டை சங்கா் கொலை வழக்கில், கெளசல்யாவின் தந்தை விடுதலை செய்யப்பட்டாா். இந்தத் தீா்ப்புக்கு பல்வேறு தரப்பினரும் எதிா்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். அதன்படி, திருவாரூா் பழைய பேருந்து நிலையம் அருகே பகுஜன் சமாஜ் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த வழக்கில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்று தர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, மாவட்டத் தலைவா் ராஜபாண்டியன் தலைமையில் நிா்வாகிகள் பலா் பங்கேற்று முழக்கங்களை எழுப்பினா்.