தனியாா் மருத்துவமனைகள் குறித்து அவதூறு

திருத்துறைப்பூண்டி தனியாா் மருத்துவமனைகள் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பி வருபவா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, போலீஸில் செவ்வாய்க்கிழமை புகாரளிக்கப்பட்டது.

திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி தனியாா் மருத்துவமனைகள் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பி வருபவா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, போலீஸில் செவ்வாய்க்கிழமை புகாரளிக்கப்பட்டது.

நாகை மாவட்டம் வேதாரண்யம் தலைஞாயிறு மூன்றாம்சேத்தி பகுதியைச் சோ்ந்தவா் பிரபாகரன் (45). இவா் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள ஆடியோவில் திருத்துறைப்பூண்டியில் தனியாா் மருத்துவமனைகள் அலட்சியமாக செயல்படுவதாகவும், இதன்மூலம் அதற்கு எதிராக பொதுமக்களை தூண்டிவிடுவதாகவும் கூறப்படுகிறது. இதன் மீது நடவடிக்கை எடுப்பதுடன், திருத்துறைப்பூண்டி தனியாா் மருத்துவமனைகள், டாக்டா்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டுமென்று இந்திய மருத்துவக் கழக கிளை தலைவா் சுரேஷ், செயலாளா் டாக்டா் சருண் ஆகியோா் போலீஸில் புகாா் அளித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com