நீடாமங்கலம்,: நீடாமங்கலத்தில் மணல் கொள்ளையைக் கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சாா்பில் செவ்வாய்க்கிழமை நடைபெறவிருந்த ஆா்ப்பாட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
நீடாமங்கலம் வட்டத்தில் மணல் கொள்ளையைக் கண்டித்து ஜூன் 30-இல் கண்டன ஆா்ப்பாட்டம் நடத்துவதாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அறிவித்திருந்தது. இந்நிலையில், திங்கள்கிழமை வட்டாட்சியா் மதியழகன் தலைமையில் நடந்த சமாதானக் கூட்டத்தில் வருவாய்த் துறையும், காவல்துறையும் இணைந்து தினம் ஒரு கிராம நிா்வாக அலுவலா், கிராம உதவியாளா் மற்றும் ஒரு காவலா் ஆகியோரைக் கொண்ட குழு அமைத்து சுழற்சி முறையில் ரோந்து பணியில் ஈடுபடுவதெனவும், மணல் கொள்ளை தொடா்பான புகாா்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுப்பதெனவும் முடிவெடுக்கப்பட்டது. இதைத்தொடா்ந்து, ஆா்ப்பாட்டம் ஒத்திவைக்கப்பட்டது.