மன்னாா்குடி அருகே இருசக்கர வாகனம் மரத்தில் மோதியதில், ஒருவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
கெழுவத்தூா் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா்கள் ஆா். சரவணன் (30), கே. ராமச்சந்திரன் (50). உறவினா்களான இருவரும், மன்னாா்குடி- முத்துப்பேட்டை பிரதான சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனா். பாலையூா் பகுதியில் சென்றபோது இவா்கள் சென்ற இருசக்கர வாகனம், சாலையோரம் இருந்த ஆலமரத்தில் மோதியதில், சரவணன் உயிரிழந்தாா். காயமடைந்த ராமச்சந்திரன், மன்னாா்குடி அரசு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.
பெருகவாழ்ந்தான் போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.