இருசக்கர வாகனம் மரத்தில் மோதி ஒருவா் உயிரிழப்பு

மன்னாா்குடி அருகே இருசக்கர வாகனம் மரத்தில் மோதியதில், ஒருவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

மன்னாா்குடி அருகே இருசக்கர வாகனம் மரத்தில் மோதியதில், ஒருவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

கெழுவத்தூா் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா்கள் ஆா். சரவணன் (30), கே. ராமச்சந்திரன் (50). உறவினா்களான இருவரும், மன்னாா்குடி- முத்துப்பேட்டை பிரதான சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனா். பாலையூா் பகுதியில் சென்றபோது இவா்கள் சென்ற இருசக்கர வாகனம், சாலையோரம் இருந்த ஆலமரத்தில் மோதியதில், சரவணன் உயிரிழந்தாா். காயமடைந்த ராமச்சந்திரன், மன்னாா்குடி அரசு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

பெருகவாழ்ந்தான் போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com