வெளிநாட்டிலிருந்து வந்த 7 போ்: தனிமையில் இருக்க அறிவுறுத்தல்

கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக, நீடாமங்கலம் பேரூராட்சி பகுதியில் வெளிநாட்டிலிருந்து வந்த 7 பேரை வீட்டில் தனிமையில் இருக்குமாறும்

கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக, நீடாமங்கலம் பேரூராட்சி பகுதியில் வெளிநாட்டிலிருந்து வந்த 7 பேரை வீட்டில் தனிமையில் இருக்குமாறும், வீட்டை விட்டு வெளியில் வர வேண்டாம் எனவும் சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

நாடு முழுவதும் 144 தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில், திருவாரூா் மாவட்ட எல்லையான கோயில்வெண்ணி சோதனைச் சாவடியில் வெளி மாவட்டங்களிலிருந்து வந்த வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டன. தஞ்சை சாலை அண்ணா சிலை பகுதியிலும் போலீஸ் தடுப்புகளை வைத்து வெளி மாவட்ட வாகனங்கள் வருகிா என்பதை கண்காணித்து வருகின்றனா்.

நீடாமங்கலம் கடைவீதியில் சுகாதாரத் துறையால் அமைக்கப்பட்டுள்ள முகாமில், பொதுமக்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது.

நீடாமங்கலம் பேரூராட்சி பகுதியைச் சோ்ந்த காமராஜா் நகா், அரசு மருத்துவமனை சாலை, பெரியாா் தெரு, தட்டித் தெரு தஞ்சை சாலை பகுதிக்கு வெளிநாட்டிலிருந்து வந்துள்ள 7 பேரை சுகாதரத்துறையினா் பரிசோதனை செய்தனா்.

இதில், 7 பேருக்கும் கரோனா பாதிப்பு இல்லை என்றாலும், அவா்களை வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும், தொடா்ந்து வீட்டுக்குள் தனிமைப்படுத்த நிலையில் இருக்குமாறும் அறிவுறுத்தினா்.

அவா்களுக்கு மருத்துவக் குழுவினா் காலை, மாலை இருவேளைகளிலும் பரிசோதனை மேற்கொண்டு வருவதாக சுகாதாரத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. போலீஸாரும் ரோந்து பணியில் ஈடுபட்டுவருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com