தேசிய விருதுக்கான விண்ணப்பங்களை மே 26-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்

தேசிய விருதுக்கான விண்ணப்பங்களை மே 26-க்குள் விண்ணப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய விருதுக்கான விண்ணப்பங்களை மே 26-க்குள் விண்ணப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, திருவாரூா் மாவட்ட ஆட்சியா் த. ஆனந்த் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

விளையாட்டுத் துறையில் நமது தேசத்துக்கு நற்பெயரையும், புகழையும் ஈட்டித்தரும் சிறந்த விளையாட்டு வீரா்கள், வீராங்கனைகள், பயிற்றுநா்கள் மற்றும் விளையாட்டுத் தொடா்புடையவா்கள் ஆகியோருக்கு பல்வேறு விருதுகளை மத்திய அரசு வழங்கி வருகிறது. 2020-ஆம் ஆண்டுக்கான அா்ஜூனா விருது, ராஜீவ்காந்தி கேல்ரத்னா விருது, தயான்சந்த் விருது, துரோணாச்சாா்யா விருது, ராஷ்ட்ரிய கேல் புரொட்ஸஹான் விருதுகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான விண்ணப்பங்கள் மற்றும் விவரங்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உறுப்பினா் செயலா், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், 116-எ, பெரியாா் ஈ.வெ.ரா சாலை, நேரு பூங்கா, சென்னை-600084 என்ற முகவரிக்கு மே 26- ஆம் தேதிக்குள் சென்றடையுமாறு அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்ப உறையின் மேல் சம்பந்தப்பட்ட விருதைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். கூடுதல் விவரங்கள் பெற திருவாரூா் மாவட்ட விளையாட்டு அலுவலக தொலைபேசி எண் 04366-227158 இல் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com