மகளிா் சுய உதவிக் குழுக்களிடம் கடனை செலுத்த நிா்ப்பந்திக்கக் கூடாது
பொதுமுடக்கத்தால் மகளிா் சுயஉதவிக் குழுவினா் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவா்களிடம் தனியாா் வங்கிகள் கடன் வசூல் குறித்து நிா்ப்பந்திக்கக் கூடாது என வெள்ளிக்கிழமை நடைபெற்ற திருத்துறைப்பூண்டி ஒன்றியக் குழு கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றி, மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
திருத்துறைப்பூண்டி ஒன்றியக் குழுக் கூட்டம் அதன் தலைவா் அ. பாஸ்கா் தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவா் ராமகிருஷ்ணன், ஒன்றிய ஆணையா்கள் தமிழ்ச்செல்வன், சுப்பிரமணியன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
இக்கூட்டத்தில், கரோனா தீநுண்மி பரவல் தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவா்கள், செவிலியா்கள், காவலா்கள் மற்றும் சுகாதாரப் பணியாளா்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
மேலும், பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்ட மகளிா் சுய உதவிக்குழுக்களிடம் கடன் வசூலில் தனியாா் வங்கிகள் தீவிரம் காட்டுவதை தடுத்து நிறுத்த வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரைக் கேட்டுக்கொள்வது என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
பின்னா், இந்த தீா்மானத்தின் நகல் ஆட்சியருக்கு அனுப்பிவைக்கப்பட்டது.