மன்னாா்குடியில் காங்கிரஸ் கட்சி சாா்பில் முன்னாள் பிரதமா் இந்திரா காந்தியின் நினைவு தினம் சனிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
இதையொட்டி, மன்னாா்குடி சந்தைப்பேட்டை பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சிக்கு காங்கிரஸ் கட்சியின் நகரத் தலைவா் ஆா். கனகவேல் தலைமை வகித்தாா். மாநில பொதுக்குழு உறுப்பினா்கள் நெடுவை ஜி.குணசேகரன், டி. வடுகநாதன் ஆகியோா் இந்திரா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
இதில், கட்சியின் மாவட்டச் செயலா் சி.பி. ராமானுஜம், நகர பொதுச் செயலா் வி. ஆனந்தகிருஷ்ணன், நகரச் செயலா் என். சுகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.