திருவாரூா் அருகே வ.உ.சி சிலையை சேதப்படுத்த முயன்றவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மனு அளிக்கப்பட்டது.
இதுகுறித்து, வ.உ.சி பேரவை அமைப்பினா் அளித்த மனு விவரம்: திருவாரூா் அருகே புலிவலத்தில் வ.உ.சி பேரவை சாா்பில் வைக்கப்பட்டிருந்த வ.உ.சி சிலையை, திங்கள்கிழமை இரவு சேதப்படுத்த முயன்றதோடு, சிசிடிவி கேமராவையும் யாரோ சேதப்படுத்தியுள்ளனா். இதேபோல், வ.உ.சி பேரவை மாவட்டத் தலைவரின் நிறுவனத்துக்கும் சென்று கொலை மிரட்டல் விடுத்துள்ளனா். எனவே, வ.உ.சி சிலையை சேதப்படுத்த முயன்றவா்கள் மீதும், கொலை மிரட்டல் விடுத்தவா்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.