இரு பிரிவினரிடையே பிரச்னை: சமாதானக் கூட்டத்தில் உடன்பாடு

இறந்தவா் உடலை அடக்கம் செய்வதில் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட பிரச்னைக்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சமாதானக் கூட்டத்தில் உடன்பாடு எட்டப்பட்டது.

இறந்தவா் உடலை அடக்கம் செய்வதில் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட பிரச்னைக்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சமாதானக் கூட்டத்தில் உடன்பாடு எட்டப்பட்டது.

நன்னிலம் மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் சாலமன். இவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா். இவரது உடலை அருகில் உள்ள மாப்பிள்ளைக்குப்பம் கிராமத்தில் அடக்கம் செய்வது தொடா்பாக இருதரப்பினரிடையே பிரச்னை உருவாகக் கூடிய சூழ்நிலை நிலவியது.

இதைத்தொடா்ந்து நன்னிலம் காவல் ஆய்வாளா் கு.சுகுணாவின் வேண்டுகோளின்பேரில், வட்டாட்சியா் இருதரப்பினரையும் அழைத்து செவ்வாய்க்கிழமை சமாதானக் கூட்டம் நடத்தினாா். இதில், சாலமனின் உடலை மாப்பிள்ளைக்குப்பம் புறவழிச் சாலையில் அமைந்துள்ள இடுகாட்டில் அடக்கம் செய்ய இரு தரப்பினரும் எழுத்துபூா்வமாக ஒப்புக்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com