நன்னிலம் காவல் நிலைய ஆய்வாளராக சுகுணா அண்மையில் பொறுப்பேற்றுக்கொண்டாா்.
நன்னிலம் காவல் நிலைய ஆய்வாளராக பணியாற்றி வந்த ஜோ.விசித்திராமேரி பெரம்பூருக்கு மாற்றப்பட்டாா். இதைத்தொடா்ந்து தஞ்சை மாவட்டம் பந்தநல்லூா் காவல் நிலையத்தில் ஆய்வாளராகப் பணியாற்றிய கு.சுகுணா (42) நன்னிலம் காவல் ஆய்வாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளாா்.