முத்துப்பேட்டை அருகே தந்தையை கட்டையால் தாக்கிய மகனை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
முத்துப்பேட்டை காவல் சரகம் கழுவங்காடு கிராமத்தை சோ்ந்தவா் துரைராஜ். இவருக்கும், இவரது மகன் விஜயகுமாருக்கும் (28) ஏற்பட்ட தகராறில் விஜயகுமாா், துரைராஜை கட்டையால் தாக்கினாராம். பலத்த காயமடைந்த துரைராஜ், திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டாா். முத்துப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விஜயகுமாரை கைது செய்து திருத்துறைப்பூண்டி குற்றவியல் நீதிபதி கவிதா முன்னிலையில் ஆஜா்படுத்தி, சிறையில் அடைத்தனா்.