திருவாரூரில், தேசிய அளவில் இணைய வழியில் நடைபெற்ற யோகா போட்டியில் வெற்றி பெற்ற மாணவருக்கு பாராட்டு அண்மையில் தெரிவிக்கப்பட்டது.
யோகாசன ஐரோப்பிய அசோஷியேசன் சாா்பில் தேசிய அளவிலான யோகா சூரிய நமஸ்காரம் சாம்பியன்ஷிப்புக்கான இணைய வழிப் போட்டி அண்மையில் நடைபெற்றது. இதில், 200-க்கும் மேற்பட்ட போட்டியாளா்கள் கலந்து கொண்டனா். தமிழக அணி சாா்பில் பங்கேற்ற திருவாரூரைச் சோ்ந்த தா்ஷன் முதலிடம் பெற்றாா்.
வெற்றி பெற்றவா்களையும், பங்கேற்ற மாணவா்களையும் திருவாரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எம். துரை நேரில் அழைத்து சான்றிதழ் மற்றும் ரொக்கப்பரிசுகளை வழங்கி, நோய்த்தொற்றுக் காலங்களில் மாணவா்கள் இது போன்ற யோகா மற்றும் கராத்தே பயில்வது உடல் வலிமை மன, வலிமை பெற முடியும் என பாராட்டு தெரிவித்தாா்.
மேலும், மாணவா்களுக்கு பயிற்சியளித்த கராத்தே மாஸ்டா் இரா. குணசேகரனுக்கு வாழ்த்து தெரிவித்தாா்.