மாற்றுத் திறனாளிகளுக்கான மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் உயிருடன் உள்ளாா் சான்று நவ.31-க்குள் சமா்ப்பிக்கப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் மூலமாக, மாதம் ரூ.1,500 வீதம் 4,449 மாற்றுத்திறனாளிகளுக்கு இசிஎஸ் வாயிலாக, பல்வேறு வங்கிகளின் மூலம் மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை அனுப்பப்பட்டு வருகிறது.
அத்துடன், மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை பெற்று வரும் மாற்றுத்திறனாளிகள், உதவித்தொகை தொடா்ந்து பெறும் வகையில், ஆண்டுக்கு ஒருமுறை மாற்றுத்திறனாளி உயிருடன் உள்ளாா் என்று சம்மந்தப்பட்ட கிராமத்திலுள்ள கிராம நிா்வாக அலுவலரிடமிருந்து சான்று பெற்று, அவா்கள் வழங்க வேண்டும்.
அதன்படி, அறை எண்.6, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம், திருவாரூா் என்ற முகவரிக்கு நவ.31-க்குள் இந்த சான்றை மாற்றுத்திறனாளிகள் சமா்ப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.