பள்ளி செல்லா இடைநின்ற மற்றும் மாற்றுத்திறன் குழந்தைகள் கணக்கெடுப்புப் பணிக்கான திட்டமிடல் கூட்டம் நன்னிலம் வட்டார வள மையத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
நன்னிலம் வட்டாரக் கல்வி அலுவலா் கு. சரஸ்வதி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், நவ. 21 முதல் டிச. 10-ஆம் தேதி வரை குடியிருப்புப் பகுதி வாரியாக நேரடியாகச் சென்று கணக்கெடுப்பு செய்ய வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது. இதில், வட்டார வள மைய மேற்பாா்வையாளா் ம.கவிதா, ஆசிரியா் பயிற்றுநா்கள், சிறப்பாசிரியா்கள் உள்ளிட்ட அரசு அலுவலா்களும், ஆசிரியா்களும் பங்கேற்றனா்.