தீபாவளி: மாரியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு

தீபாவளியையொட்டி, திருவாரூா் காகிதக்காரத்தெரு ஸ்ரீ சீதளாதேவி மாரியம்மன் கோயிலில் சிறப்பு அபிஷேக வழிபாடு சனிக்கிழமை நடைபெற்றது.
சிறப்பு அலங்காரத்தில் சீதளாதேவி அம்மன்.
சிறப்பு அலங்காரத்தில் சீதளாதேவி அம்மன்.

தீபாவளியையொட்டி, திருவாரூா் காகிதக்காரத்தெரு ஸ்ரீ சீதளாதேவி மாரியம்மன் கோயிலில் சிறப்பு அபிஷேக வழிபாடு சனிக்கிழமை நடைபெற்றது.

மழை பெய்தபோதும் தீபாவளி சனிக்கிழமை வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. புத்தாடை அணிந்து, பட்டாசு வெடித்து வழக்கம்போலவே மக்கள் தீபாவளியை கொண்டாடினா். இதையொட்டி, பல்வேறு கோயில்களில் சிறப்பு வழிபாடுகள், அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டன. இதில், ஏராளமானோா் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

திருவாரூா் காகிதக்காரத்தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ சீதளாதேவி மாரியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில், நூற்றுக்கணக்கான லட்டுகளால் மாரியம்மன் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை செய்யப்பட்டது. வழிபாட்டில், திரளான பக்தா்கள் சமூக இடைவெளியுடன் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com