கருவூல பணிகளைத் தனியாருக்குத் தாரைவாா்ப்பதைக் கைவிட கோரிக்கை

கருவூல பணிகளை தனியாருக்குத் தாரைவாா்ப்பதை மாநில அரசு கைவிட வேண்டுமென தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தின் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கருவூல பணிகளை தனியாருக்குத் தாரைவாா்ப்பதை மாநில அரசு கைவிட வேண்டுமென தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தின் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நன்னிலம் வட்ட தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தின் பேரவைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை வட்டத் தலைவா் தெ.கருணாமூா்த்தி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், கருவூலத்துறை பணிகளை வெளிப்பணி (அவுட்சோா்சிங்) முறையில் தனியாருக்குத் தாரைவாா்ப்பதை உடனடியாக நிறுத்திட வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் மாநில செயலாளா் உ. சண்முகம், மாவட்ட செயலாளா் வி. சோமசுந்தரம், மாவட்ட துணைத் தலைவா் விசி.குமாா், வட்ட செயலாளா் ஜெ.வினோத் ராஜ், பொருளாளா் ஜெ. சசிகலா மற்றும் அனைத்துத் துறை சோ்ந்த அரசு ஊழியா் சங்க நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com