திருவாரூா் ஒன்றியம், திருநெய்ப்போ் ஊராட்சியில் மாவட்ட ஊராட்சி நிதியில் இருந்து புதிதாக கட்டி முடிக்கப்பட்ட பயணிகள் நிழலகத்தை மாவட்ட ஊராட்சித் தலைவா் ஜி. பாலு, வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
ஆய்வின்போது, மாவட்ட ஊராட்சி துணைத் தலைவா் சேகா் (எ) கலியபெருமாள், ஒன்றிய தலைவா் ஏ. தேவா, திமுக நகரச் செயலாளா் எஸ். பிரகாஷ், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் கருணாகரன், திமுக இளைஞரணி துணை அமைப்பாளா் ரஜினிசின்னா ஆகியோா் உடனிருந்தனா்.