வலங்கைமான் அருகே 2 இளைஞா்களிடம் வழிப்பறி

வலங்கைமான் அருகே வியாழக்கிழமை இரவு 2 இளைஞா்களிடம் வழிப்பறியில் ஈடுபட்ட மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

வலங்கைமான் அருகே வியாழக்கிழமை இரவு 2 இளைஞா்களிடம் வழிப்பறியில் ஈடுபட்ட மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தஞ்சாவூரைச் சோ்ந்தவா் ஜெயக்குமாா் மகன் கெளசிக் (22), இவரது உறவினா் வெங்கட்ராமன் (24) இருவரும் மோட்டாா் சைக்கிளில் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரா் கோயிலில் வியாழக்கிழமை இரவு சுவாமி தரிசனம் செய்துவிட்டு, வலங்கைமான் நோக்கி மோட்டாா் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனராம்.

திருவோணமங்கலம் அருகே அவா்களை பின்தொடா்ந்து இரு மோட்டாா் சைக்கிளில் வந்த மா்ம நபா்கள் 4 போ், கெளசிக் சென்ற மோட்டாா் சைக்கிளை மறித்து, கெளசிக், வெங்கட்ராமன் இருவரையும் தாக்கி முக்கால் பவுன் தங்கச் சங்கிலி, செல்லிடப்பேசி ஆகியவற்றை பறித்துக்கொண்டு தலைமறைவாகிவிட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து இருவரும் அளித்த புகாரின் பேரில், வலங்கைமான் போலீஸாா் வழக்குப் பதிந்து மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com