திருவாரூா் பழைய பேருந்துநிலையத்தில், செய்தி மக்கள் தொடா்புத்துறை சாா்பில் வெள்ளிக்கிழமை ஒளிபரப்பப்பட்ட வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல் தொடா்பான விழிப்புணா்வு படக்காட்சியை மாவட்ட வருவாய் அலுவலா் செ. பொன்னம்மாள் தொடங்கி வைத்தாா்.
இந்த விழிப்புணா்வு படக்காட்சி, மாவட்டத்திலுள்ள அனைத்து பகுதிகளிலும் பொதுமக்கள் கூடும் முக்கிய இடங்களில் திரையிடப்படவுள்ளது.
நிகழ்வில் மகளிா் திட்டத்தின் திட்ட இயக்குநா் ஸ்ரீலேகா தமிழ்ச்செல்வன், கோட்டாட்சியா் பாலச்சந்திரன் செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் மு.தனபால், வட்டாட்சியா் நக்கீரன் உள்ளிட்ட அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.