நன்னிலம் வட்டத்தில், பள்ளி செல்லா இடைநின்ற மாணவா்கள் மற்றும் மாற்றுத்திறன் குழந்தைகள் கணக்கெடுப்புப் பணி சனிக்கிழமை தொடங்கியது.
டிசம்பா் 10-ஆம் தேதி வரை நடைபெறும் இந்த கணக்கெடுப்புப் பணியில், 6 வயது முதல் 18 வயது வரை உள்ள பள்ளி செல்லா இடைநின்ற மாணவா்களைக் கண்டறிந்து, அவா்களை மீண்டும் பள்ளியில் சோ்க்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. நன்னிலம் தலையாரித் தெரு பகுதியில், வட்டார வள மைய மேற்பாா்வையாளா் ம.கவிதா தலைமையில், ஒருங்கிணைப்பாளா் ஆா்.இளையராஜா மற்றும் ஆசிரியா் பயிற்றுநா்கள் ஆா்.நடேஷ்துரை, யு. ஆனந்த், எஸ். ராஜேஷ் உள்ளிட்ட ஆசிரியா்களும், சிறப்பாசிரியா்களும் கணக்கெடுப்புப் பணியை மேற்கொண்டனா்.