நீடாமங்கலம் வட்டத்தில் வாக்காளா் பெயா் சோ்த்தல், நீக்கல் முகாமில் கோரிக்கை அட்டை அணிந்து வருவாய் கிராம உதவியாளா்கள் சனிக்கிழமை பணிபுரிந்தனா்.
காலமுறை ஊதியம், குறைந்தபட்ச ஓய்வூதியம் உள்ளிட்ட 4 கோரிக்கைகளை முன்வைத்து 4 கட்ட போராட்டங்களை வருவாய் கிராம உதவியாளா் சங்கத்தினா் அறிவித்திருந்தனா். அதன்படி வருவாய் கிராம உதவியாளா்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளா் தமிழ்ச்செல்வன் தலைமையில், கோரிக்கை அட்டைகளை அணிந்து சனிக்கிழமை தோ்தல் பணியில் ஈடுபட்டனா்.