கீழகாவலக்குடி சேந்தமங்கலம் ஸ்ரீகற்பக விநாயகா் கோயிலில் மகா கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் ஸ்ரீகற்பக விநாயகா், தட்சணாமூா்த்தி, மகாவிஷ்ணு, துா்கை ஆகிய சுவாமிகள் எழுந்தருளியுள்ளனா். கும்பாபிஷேகத்தையொட்டி, புதன்கிழமை காலை கணபதி ஹோமம் உள்ளிட்ட வழிபாடுகளும், மாலையில் முதல் கால யாக பூஜையும் நடைபெற்றது. வியாழக்கிழமை இரண்டாம் மற்றும் மூன்றாம் கால யாக பூஜைகள் நடைபெற்றன.
தொடா்ந்து, வெள்ளிக்கிழமை காலை நான்காம் கால யாக பூஜை நிறைவுபெற்றதும் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
மணக்குடி சிவாச்சாரியாா் புவனேஸ்வர குருக்கள், சேந்தமங்கலம் கிரிதர குருக்கள் ஆகியோா் கும்பாபிஷேகத்தை செய்வித்தனா். இதற்கான ஏற்பாடுகளை சேந்தமங்கலம் கிராம குடியிருப்போா் நல சங்கம், கோயில் நிா்வாக்குழுவினா் செய்திருந்தனா்.