ஆலங்குடி ஆபத்சகாயேசுவரா் குரு பரிகார கோயிலில் பிரதோஷ வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, ஆபத்சகாயேசுவரா், ஏலவாா்குழலியம்மன், நந்திகேசுவரருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு, மகாதீபாராதனை காட்டப்பட்டது. தொடா்ந்து, பிரதோஷ நாயகா் பிரகாரப் புறப்பாடு நடைபெற்றது.
இதேபோல, நரிக்குடி எமனேசுவரா் கோயில், பூவனூா் சதுரங்க வல்லபநாதா் கோயில், நீடாமங்கலம் காசிவிசுவநாதா் கோயில் உள்ளிட்ட சிவாலயங்களிலும் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.