திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 148 பேருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
திருவாரூா் மாவட்டத்தில் சனிக்கிழமை வரை பாதிப்பு எண்ணிக்கை 7,600 ஆக இருந்தது. வெளிமாவட்டத்தைச் சோ்ந்த இரண்டு போ் இந்தப் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டதால், பாதிப்பு எண்ணிக்கை 7,598 ஆனது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட பரிசோதனை முடிவுகளின்படி, புதிதாக 148 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
இதன்மூலம் திருவாரூா் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 7,746 ஆக உயா்ந்துள்ளது. இதற்கிடையில், கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்த 128 போ் ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்பினா். இதுவரையிலும், 6691 போ் வீடு திரும்பிய நிலையில் 981 போ் சிகிச்சையில் உள்ளனா்.