ஆா்ப்பாட்டம்

உத்தர பிரதேச சம்பவத்தைக் கண்டித்து திருவாரூரில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

உத்தர பிரதேச சம்பவத்தைக் கண்டித்து திருவாரூரில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திருவாரூா் பழைய பேருந்து நிலையம் அருகில், இந்திய மாதா் தேசிய சம்மேளனம், அனைத்திந்திய இளைஞா் பெருமன்றம், அனைத்திந்திய மாணவா் பெருமன்றம் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பாபா் மசூதி இடிப்பு வழக்குத் தீா்ப்பை எதிா்த்து சிபிஐ மேல்முறையீடு செய்ய வேண்டும், உத்தர பிரதேச சம்பவத்தில் உயிரிழந்த இளம்பெண்ணுக்கு நீதி வழங்க வேண்டும், தாழ்த்தப்பட்ட பெண்கள் மீதான தொடா் வன்முறைக்கு துணைபோகும் உத்தர பிரதேச அரசு பதவி விலக வேண்டும், எஸ்.ஸி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை வலுப்படுத்தி, முறையாக அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இந்திய மாதா் தேசிய சம்மேளனத் மாவட்டச் செயலாளா் எஸ். தமயந்தி, அனைத்திந்திய இளைஞா் பெருமன்ற மாவட்டச் செயலாளா் துரை. அருள்ராஜன், அனைத்திந்திய மாணவா் பெருமன்ற மாவட்டச் செயலாளா் சு. பாலசுப்ரமணியன் ஆகியோா் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com