மன்னாா்குடி அருகே வாய்க்காலின் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி கேகே நகா் குடியிருப்போா் நலச்சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
கேகே நகா் பொதுச்சாலை வழியாக குடிநீா் குழாய் செல்வதால், பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய வகையில் உள்ள தென்னங்கன்றுகளை அகற்றி, வேறு இடத்தில் பதியமிட வேண்டும், ருக்மணி குளம் செல்லும் வடிகால் வாய்க்காலை தூா்வாரி, தண்ணீா் வடிய முடியாமல் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள இடங்களை அகற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
சங்கத் தலைவா் எஸ். பட்டம்மாள் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், செயலாளா் எம். ராமகிருஷ்ணன், பொருளாளா் எஸ். ரவீந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். பின்னா் கோரிக்கைகளை வலியுறுத்தி நகராட்சி அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.