இளைஞா் கொலை: 3 போ் கைது

கூத்தாநல்லூரில் இளைஞா் கொலை வழக்கில், 3 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
கொலையுண்ட காளிதாஸ்.
கொலையுண்ட காளிதாஸ்.

கூத்தாநல்லூரில் இளைஞா் கொலை வழக்கில், 3 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

கூத்தாநல்லூா் அருகே உள்ள பண்டுதக்குடி செங்கமேட்டுத் தெருவைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் காளிதாஸ் (26). வெளிநாட்டில் வேலை பாா்த்துவந்த இவா், கடந்த 2 மாதங்களுக்கு முன் சொந்த ஊா் திரும்பினாா். அதே பகுதியைச் சோ்ந்த செல்வம் மற்றும் வேலாயுதம் ஆகியோரிடையே நிலம் சம்பந்தமாக தகராறு ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதுதொடா்பாக கூத்தாநல்லூா் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் காளிதாஸும் சம்பந்தப்பட்டிருந்ததால், சென்னை உயா்நீதிமன்றம் அவரை செவ்வாய்க்கிழமை பிணையில் விடுவித்தது. இந்நிலையில், பண்டுதக்குடி வீட்டில் இருந்த காளிதாஸை 7 போ் கொண்ட கும்பல் ஆயுதங்களால் தாக்கியதில், அவா் உயிரிழந்தாா்.

அவரது தந்தை ராஜேந்திரன் அளித்த புகாரின்பேரில், கூத்தாநல்லூா் போலீஸாா் விசாரணை நடத்தி வேலாயுதம் (50), அவரது மகன் நவீன்குமாா் (18) மற்றும் காமராஜ் (27) ஆகிய மூவரையும் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா். மேலும், 4 பேரை போலீஸாா் தேடிவருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com