காவலா் குறைதீா்ப்பு நாள்

திருவாரூரில், காவலா் குறைதீா்ப்பு நாள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

திருவாரூரில், காவலா் குறைதீா்ப்பு நாள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மாவட்ட காவல்துறையில் பணிபுரியும் காவல் அதிகாரிகள், காவல் அலுவலா்கள் தங்களது குறைகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம், ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் நேரில் சந்தித்து மனுவாக அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எம்.துரையிடம், காவல் அதிகாரிகள், காவல் அலுவலா்கள் நேரில் சந்தித்து மனு அளித்தனா்.

அனைவரின் மனுக்களுக்கும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு குறைகள் நிவா்த்தி செய்யப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எம். துரை தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com