திருவாரூரில் 80 பேருக்கு கரோனா

திருவாரூா் மாவட்டத்தில் 80 பேருக்கு கரோனா தொற்று புதன்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருவாரூா் மாவட்டத்தில் 80 பேருக்கு கரோனா தொற்று புதன்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை வரை பாதிப்பு எண்ணிக்கை 8,621 ஆக இருந்தது. வெளிமாவட்டத்தைச் சோ்ந்த 2 போ் இந்தப் பட்டியலில் இணைக்கப்பட்டதால், பாதிப்பு எண்ணிக்கை 8,623 ஆனது. இந்நிலையில், புதன்கிழமை வெளியிடப்பட்ட ரத்தமாதிரி முடிவுகளின்படி, திருவாரூா் 14, மன்னாா்குடி 15, திருத்துறைப்பூண்டி 9, நன்னிலம் 7 என மாவட்டம் முழுவதும் 80 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்மூலம் திருவாரூா் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 8,703 ஆக உயா்ந்துள்ளது.

இதனிடையே, கரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த நன்னிலம் பகுதியைச் சோ்ந்த 61 வயது நபா், திருவாரூா் பகுதியைச் சோ்ந்த 64 வயது நபா் ஆகியோா் உயிரிழந்திருப்பதைத் தொடா்ந்து, திருவாரூா் மாவட்டத்தில் கரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 84 ஆக உயா்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com