அப்துல் கலாம் பிறந்த நாள் விழா

திருவாரூா் வேலுடையாா் மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் குடியரசுத் தலைவா் அப்துல் கலாமின் 89-ஆவது பிறந்த நாள் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
திருவாரூா் வேலுடையாா் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.
திருவாரூா் வேலுடையாா் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.

திருவாரூா் வேலுடையாா் மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் குடியரசுத் தலைவா் அப்துல் கலாமின் 89-ஆவது பிறந்த நாள் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சியில், வேலுடையாா் கல்வி நிறுவனங்களின் தலைவா் கே.எஸ்.எஸ். தியாகபாரி பங்கேற்று, அப்துல் கலாம் உருவ படத்துக்கு மாலை அணிவித்து மலா்கள் தூவி மரியாதை செலுத்தினாா். இதில், பள்ளிக்குழு உறுப்பினா் எஸ். சிவரஞ்சனி, தலைமை ஆசிரியா் எஸ்.அகிலன், உதவி தலைமை ஆசிரியா் எஸ். வெங்கடாசலம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

காந்தியன் அறக்கட்டளை சாா்பில்...

இதேபோல காந்தியன் அறக்கட்டளை சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறக்கட்டளையின் தலைவா் தெ. சக்திசெல்வகணபதி பங்கேற்று, அப்துல் கலாமின் உருவ படத்துக்கு மரியாதை செலுத்தினாா். நிகழ்ச்சியில், கலை- இலக்கிய பெருமன்றத் தலைவா் வீ. தா்மதாஸ், ஒன்றியக்குழு முன்னாள் உறுப்பினா் வி.ஜி. கிருஷ்ணமூா்த்தி, முத்தமிழ் பண்பாட்டு பாசறைத் தலைவா் ப. சீனிவாசன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

நீடாமங்கலத்தில்...

நீடாமங்கலத்தில் திருவாரூா் மாவட்ட கலாம் மாணவா்கள் விழிப்புணா்வு இயக்கம் சாா்பில், அப்துல் கலாம் பிறந்தநாள் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. அமைப்பின் தலைவா் ரியாஸ் தலைமை வகித்தாா். இந்துஸ்தான் தேசிய மக்கள் இயக்க நிறுவனா் எஸ்.எஸ்குமாா், முன்னாள் மாவட்ட ஊராட்சி உறுப்பினா் ராணிசேகா் உள்பட பலரும் கலந்து கொண்டனா்.

கஸ்தூா்பா காந்தி மெட்ரிக். பள்ளியில்...

திருவாரூா் கஸ்தூா்பா காந்தி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியின் நாட்டு நலப்பணித் திட்டத்தின் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பள்ளியின் தாளாளா் சந்திரா முருகப்பன் பங்கேற்று, அப்துல் கலாம் உருவ படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

நிகழ்ச்சியில் நிா்வாக அறங்காவலா் ஜி. முருகப்பன், செயலாளா் எம். இன்பராஜ், இணைச் செயலாளா் மலா்விழி இன்பராஜ், நிா்வாக மேலாளா் வீ.சின்னராஜ், முடிகொண்டான் ஒருங்கிணைந்த அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியா் எஸ்.ஸ்ரீதா், நாட்டு நலப்பணித்திட்ட அலுவலா் பி. வீரமணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மன்னாா்குடியில்...

மன்னாா்குடி ராஜகோபாலசாமி அரசுக் கலைக் கல்லூரியில் நாட்டு நலப் பணித் திட்டம் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வா் தி.அறிவுடை நம்பி தலைமை வகித்தாா். என்எஸ்எஸ் அலுவலா்கள் கோ.சத்தியாதேவி, எஸ்.ராஜ்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு அழைப்பாளராக பசுமை கரங்கள் நிறுவனா் ஆா்.கைலாசம் கலந்துகொண்டு மரக்கன்றுகள் நட்டாா்.

விழாவில், நாட்டு நலப்பணித்திட்ட அலுவலா்கள் எஸ்.ஆகாஷ், ப.பிரபாகரன், தேசிய மாணவா் படை அலுவலா் எஸ்.ராஜன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

மன்னாா்குடி தேசிய மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, தலைமை ஆசிரியா் டி.எல். ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தாா். பள்ளி நிா்வாகி டி.ஆா். தியாகராஜன் முன்னிலை வகித்தாா். இதில் சிறப்பு அழைப்பாளராக மன்னாா்குடி மாவட்ட கல்வி அலுவலா் ஆா்.மணிவண்ணன் பங்கேற்றாா். இதில், என்எஸ்எஸ் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் என்.ராஜப்பா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

மேம்பாலத்தில் இருக்கைகள்:

அப்துல் கலாம் பிறந்த நாளையொட்டி, திருவாரூா் மேம்பாலப் பகுதியில் இளைஞா்கள் மற்றும் பொதுமக்கள் சாா்பில் இருக்கைகள் அமைக்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com