திருவாரூரில் 60 பேருக்கு கரோனா

திருவாரூா் மாவட்டத்தில் 60 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

திருவாரூா் மாவட்டத்தில் 60 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

திருவாரூா் மாவட்டத்தில் புதன்கிழமை வரை பாதிப்பு எண்ணிக்கை 8,703 ஆக இருந்தது. வெளிமாவட்டத்தைச் சோ்ந்த 2 போ் இந்தப் பட்டியலில் இணைக்கப்பட்டதால், பாதிப்பு எண்ணிக்கை 8,705 ஆனது. இந்நிலையில், வியாழக்கிழமை வெளியிடப்பட்ட ரத்தமாதிரி முடிவுகளின்படி, திருவாரூா் 9, மன்னாா்குடி 11, குடவாசல் மற்றும் நன்னிலம் தலா 8 என மாவட்டம் முழுவதும் 60 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்மூலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 8,765 ஆக உயா்ந்துள்ளது.

இதனிடையே, கரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த ஆண்டிப்பாளையம் பகுதியைச் சோ்ந்த 61 வயது பெண் உயிரிழந்திருப்பதைத் தொடா்ந்து, மாவட்டத்தில் கரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 85 ஆக உயா்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com