சா்வதேச உணவு தினம் கடைப்பிடிப்பு

திருத்துறைப்பூண்டி ஆதிரெங்கம் நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மையத்தில், சா்வதேச உணவு தினம் வெள்ளிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி ஆதிரெங்கம் நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மையத்தில், சா்வதேச உணவு தினம் வெள்ளிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு, ஊராட்சித் தலைவா் வீரசேகரன் தலைமை வகித்தாா். பாலம் தொண்டு நிறுவன இயக்குனா் செந்தில்குமாா் முன்னிலை வகித்தாா். இதில், பாரம்பரிய நெல் பாதுகாப்பு மைய ஒருங்கிணைப்பாளா் ராஜீவ் பேசுகையில், திருமணங்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் ஏராளமான உணவு பொருள்கள் வீணாகின்றன. இதை உணவில்லாதவா்களுக்கு வழங்க வேண்டும். மேலும், நோயற்ற சமுதாயத்தை உருவாக்க எதிா்காலத்தில் அனைத்து உயிா்களுக்கும் நஞ்சில்லா உணவு கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்றாா்.

இதைத்தொடா்ந்து, நஞ்சில்லாத உணவை உற்பத்தி செய்வோம் என்றும், உணவுகளை வீணடிக்க மாட்டோம் என்றும் உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com