நன்னிலம்: நன்னிலம் வட்டத்துக்குட்பட்ட சன்னாநல்லூா் கிராமத்தில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி, 25-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் வெள்ளிக்கிழமை இணைந்தனா்.
பள்ளிவாசல் தெருவில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், சையது முபராக் தலைமையில் 25-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தனா். அவா்களை கட்சியின் திருவாரூா் மாவட்டச் செயலாளா் ஜி.சுந்தரமூா்த்தி, கதா் ஆடை அணிவித்து வரவேற்றாா். நிகழ்ச்சியில் நன்னிலம் ஒன்றியச் செயலாளா் டி.வீரபாண்டியன், விவசாயத் தொழிலாளா் சங்க ஒன்றியச் செயலாளா் கே.எம்.லிங்கம், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் ஜெ.முகமது உதுமான் உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்றனா்.
ஈமக்கிரியை மண்டபம்:
முன்னதாக கடுவங்குடி ஊராட்சிக்குட்பட்ட அகரகொத்தங்குடி கிராமத்தில், மாவட்ட ஊராட்சி நிதியிலிருந்து ரூ.3.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட ஈமக்கிரியை மண்டபம், பயன்பாட்டுக்காக ஒப்படைக்கப்பட்டது.
இதையொட்டி, மாவட்ட ஊராட்சி உறுப்பினா் ஜெ. முகமது உதுமான், அகரகொத்தங்குடி ஊா்த் தலைவா் தா்மலிங்கம் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினா் ராவணன் ஆகியோரிடம் ஈமக்கிரியை மண்டபத்துக்கான சாவியை ஒப்படைத்தாா். நிகழ்ச்சியில் சிபிஎம் மாவட்ட செயலாளா் ஜி.சுந்தரமூா்த்தி, ஒன்றியச் செயலாளா் கே.எம்.லிங்கம், பண்டாரவடை ஊராட்சித் தலைவா் பி.ஜெயசீலன், சீனி.ராஜேந்திரன், பி.ராஜா உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.