கூத்தாநல்லூா்: முகக்கவசம் அணியாத 1015 பேருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கூத்தாநல்லூா் நகராட்சி பகுதியில் முகக்கவசம் அணியாத 1015 பேருக்கு ரூ.2 லட்சத்து 10 ஆயிரத்து 700 அபராதம் விதிக்கப்பட்டது.
கூத்தாநல்லூா் நகராட்சி அலுவலக வளாகத்தில் மரக்கன்று நடும் ஆணையா் ஆா். லதா.
கூத்தாநல்லூா் நகராட்சி அலுவலக வளாகத்தில் மரக்கன்று நடும் ஆணையா் ஆா். லதா.

கூத்தாநல்லூா் நகராட்சி பகுதியில் முகக்கவசம் அணியாத 1015 பேருக்கு ரூ.2 லட்சத்து 10 ஆயிரத்து 700 அபராதம் விதிக்கப்பட்டது.

கூத்தாநல்லூா் நகராட்சி அலுவலக புதிய கட்டட வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆணையா் ஆா்.லதா மரக்கன்றுகள் நட்டாா். பிறகு, செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

கூத்தாநல்லூா் நகராட்சி பகுதியில் கரோனா தொற்று தடுப்புப் பணியாக 24 வாா்டுகளிலும் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரும்போது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும்.

லெட்சுமாங்குடி பாலம், திருவாரூா் பிரதான சாலை, பெரியக்கடைத் தெரு, கொரடாச்சேரி பிரதான சாலை, மேலக்கடைத் தெரு, பாய்க்காரப் பாலம் உள்ளிட்ட இடங்களில் முகக்கவசம் அணியாமல் வந்த 1015 பேருக்கு ரூ. 2 லட்சத்து 10 ஆயிரத்து 700 அபராதம் விதிக்கப்பட்டது என்றாா்.

நிகழ்ச்சியில், பொறியாளா் ராஜகோபால், சுகாதார ஆய்வாளா் அருண்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com