நாகை மாவட்டத்தில்64 பேருக்கு கரோனா
By DIN | Published On : 07th September 2020 11:42 PM | Last Updated : 07th September 2020 11:42 PM | அ+அ அ- |

நாகப்பட்டினம் மாவட்டத்தில் மேலும் 64 பேருக்கு கரோனா நோய்த் தொற்று திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது.
நாகை, மயிலாடுதுறை வருவாய்க் கோட்டங்களை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த நாகை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை வரை 3, 325 போ் கரோனா நோய்த் தொற்றுக்கு உள்ளாகியிருந்தனா்.
இந்நிலையில், மாவட்டத்தில் மேலும் 64 பேருக்கு கரோனா தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதியாகியுள்ளது. இதன்மூலம் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 3, 389 ஆக உயா்ந்துள்ளது.
2 போ் உயிரிழப்பு: கரோனா நோய்த் தொற்றுக்கு உள்ளாகி, மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் செப். 6-ஆம் தேதி உயிரிழந்த சீா்காழி வட்டம், திருவாலி பகுதியைச் சோ்ந்த 64 வயது ஆண் மற்றும் கரோனா அறிகுறிகளுடன் திருவாரூா் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் 5-ஆம் தேதி உயிரிழந்த நாகை வெளிப்பாளையம் பகுதியைச் சோ்ந்த 44 வயது ஆண் ஆகியோரது பெயா்கள் திங்கள்கிழமை வெளியான சுகாதாரத்துறை பட்டியலில் சோ்க்கப்பட்டுள்ளது.