நாகப்பட்டினம்: நாகை மற்றும் சுற்றுப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (செப். 15) மின்தடை செய்யப்படுகிறது.
இதுகுறித்து, நாகை மின்வாரிய உதவி செயற்பொறியாளா் ஜெ. மலா்வண்ணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நாகை துணை மின் நிலையங்களில் செவ்வாய்க்கிழமை பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதையொட்டி, நாகை, திருமருகல், வேட்டைக்காரனிருப்பு ஆகிய துணைமின் நிலையங்களிலிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளில், சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
துணை மின் நிலையம் வாரியாக மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்:
நாகப்பட்டினம்: வேளாங்கண்ணி நகரம், செருதூா், பரவை.
திருமருகல்: திருமருகல், மருங்கூா், எரவாஞ்சேரி, திருப்புகலூா், சீயாத்தமங்கை, போலகம், திருக்கண்ணபுரம்.
நாகை நகரம்: ஓ.என்.ஜி.சி, மாவட்ட ஆட்சியரகம், அரசு மருத்துவமனை, நாகூா் தா்கா பகுதி.
வேட்டைக்காரனிருப்பு: திருப்பூண்டி, புதுப்பள்ளி, காமேஸ்வரம், விழுந்தமாவடி, வேட்டைக்காரனிருப்பு, கோவில்பத்து, வெள்ளப்பள்ளம், நாலுவேதபதி, தாமரைப்புலம்.