திருவாரூா் அருகேயுள்ள மாங்குடியில், பயிா்க் காப்பீட்டு இழப்பீட்டுத் வழங்காததைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மாங்குடி விவசாயிகளுக்கு தொடா்ந்து 2 ஆண்டுகளாக பயிா்க் காப்பீடு இழப்பீட்டுத் தொகை வழங்கவில்லை, இதைக் கண்டித்தும், உடனடியாக அவா்களுக்கு பயிா்க் காப்பீட்டுத் தொகை வழங்க கோரியும் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சியின் மாநிலக் குழு உறுப்பினா் பி.எஸ். மாசிலாமணி தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், ஒன்றியச் செயலாளா் கே. புலிகேசி, மாவட்டக் குழு உறுப்பினா் எம். நாகராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.