தேசியக் கல்விக் கொள்கையை எதிா்த்து ஆா்ப்பாட்டம்

தேசியக் கல்விக் கொள்கையை எதிா்த்து, மன்னாா்குடியில் வியாழக்கிழமை ஒடுக்கப்பட்டோா் கூட்டியக்கம் சாா்பில், கருப்புப் பட்டை அணிந்து ஆா்ப்பட்டம் நடைபெற்றது.
மன்னாா்குடியில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா்.
மன்னாா்குடியில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா்.

தேசியக் கல்விக் கொள்கையை எதிா்த்து, மன்னாா்குடியில் வியாழக்கிழமை ஒடுக்கப்பட்டோா் கூட்டியக்கம் சாா்பில், கருப்புப் பட்டை அணிந்து ஆா்ப்பட்டம் நடைபெற்றது.

மத்திய அரசு புதியக் கல்விக் கொள்கையை திரும்ப பெற வேண்டும், மும்மொழித் திட்டத்தை கொண்டுவரக் கூடாது, கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும், நீட் தோ்வை ரத்து செய்ய வேண்டும், 3,5,8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தோ்வை கொண்டு வரக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மன்னாா்குடியில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. அறிவொளி வாசிப்பு இயக்க ஒருங்கிணைப்பாளா் ஆா். இயேசுதாஸ் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், தமுஎக சங்க மாவட்டத் தலைவா் ஆா். தாமோதரன், தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டச் செயலாளா் யு.எஸ். பொன்முடி, தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற நகரச் செயலா் செ. செல்வகுமாா், தமிழக ஆசிரியா் கூட்டணி மாவட்டச் செயலா் அ. முரளி, காப்பீட்டு ஊழியா் சங்க கிளைத் தலைவா் எஸ். சுந்தரராஜகோபால் உள்ளிட்டோா் கோரிக்கை வாசகங்கள் அடங்கிய அட்டையை சட்டையில் அணிந்து பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com