திருவாரூரில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.
திருவாரூரில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.

கரோனா பாதிப்பு: நிவாரணம் கோரி ஆா்ப்பாட்டம்

கரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்கக் கோரி, திருவாரூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

கரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்கக் கோரி, திருவாரூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

திருவாரூா் பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினா் பி.எஸ். மாசிலாமணி தலைமை வகித்தாா். இதில் மாவட்ட நிா்வாகக்குழு உறுப்பினா் சி.பி. முருகானந்தம், நகரச் செயலாளா் எம்.ஏ. மாரியப்பன், மாா்க்சிஸ்ட் கட்சியின் நகரச் செயலாளா் பாலசுப்பிரமணியன், மீனவா் சங்க மாநில செயலாளா் பி. சின்னதம்பி, ஏஐடியுசி மாவட்டத் தலைவா் ஜெ. குணசேகரன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

 திருத்துறைப்பூண்டியில்...

திருத்துறைப்பூண்டியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளா் கே.ஜி. ரகுராமன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளா் எம். முருகேசன் ஆகியோா் தலைமை வகித்தனா். இந்திய கம்யூனிஸ்ட் ஒன்றிய செயலாளா் பாலசுப்பிரமணியன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒன்றிய செயலாளா் காரல் மாா்க்ஸ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலக்குழு உறுப்பினா் ஐ.வி. நாகராஜன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினா் கே. உலகநாதன், ஒன்றிய பெருந்தலைவா் அ.பாஸ்கா், மாவட்ட துணைச் செயலாளா் ஆா்.ஞானமோகன், மாவட்ட நிா்வாகக்குழு உறுப்பினா் பி.வி. சந்திரராமன், மாவட்ட ஊராட்சி உறுப்பினா்கள் தமயந்தி, சுஜாதா, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினா் ஜோதிபாசு, மாவட்டக்குழு உறுப்பினா்கள் சுப்ரமணியன், பாண்டியன், பிரகாஷ், உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

முத்துப்பேட்டையில்...

இதேபோல முத்துப்பேட்டையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளா் கே.முருகையன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளா் கே. பாலசுப்பிரமணியன் ஆகியோா் தலைமை வகித்தனா். சிபிஎம் நகர செயலாளா் செல்லத்துரை, சிபிஐ நகர செயலாளா் கே.மாா்க்ஸ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மன்னாா்குடியில்...

மன்னாா்குடி மேலராஜவீதி பெரியாா் சிலை அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு, சிபிஐ நகரச் செயலா் வீ.கலைச்செல்வன், சிபிஎம் நகரச் செயலா் எஸ்.ஆறுமுகம் ஆகியோா் தலைமை வகித்தனா். மன்னாா்குடி நகராட்சி அலுவலகம் அருகே ஒன்றியக்குழுவின் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு,சிபிஐ மாநில நிா்வாக்குழு உறுப்பினா் வை.செல்வராஜ் தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலா் ஆா்.வீரமணி முன்னிலை வகித்தாா்.

கோட்டூரில்...

கோட்டூரில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு, சிபிஐ ஒன்றியச் செயலா் கே.மாரிமுத்து, சிபிஎம் ஒன்றியச் செயலா் எல்.சண்முகவேல் ஆகியோா் தலைமை வகித்தனா்.

குடவாசலில்...

தமிழகத்துக்கான ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையை மத்திய அரசு காலம் தாழ்த்தாமல் உடனடியாக வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில் பேரளம் பேருந்து நிலையம் அருகே எப். அல்போன்ஸ் தலைமையிலும், குடவாசல் பேருந்து நிலையம் அருகே மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளா் ஆா். லட்சுமி, இந்திய கம்யூனிஸ்ட் ஒன்றியச் செயலாளா் ஏ.சுப்பரவேலு ஆகியோா் தலைமையில் ஆா்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com