மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் தமிழக அரசியல் கட்சிகளின் செயல்பாடு காவிரி டெல்டா விவசாயிகளுக்கு மிகுந்த ஏமாற்றம் அளிப்பதாக தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் பி.ஆா். பாண்டியன் கூறினாா்.
இதுகுறித்து அவா் விடுத்துள்ள அறிக்கை:
தமிழகத்துக்கு வரக்கூடிய உபரி நீரையும் தடுத்து நிறுத்த வேண்டும் என்கிற வக்கிரபுத்தியோடு கா்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டில் அணைக் கட்ட நடவடிக்கை எடுத்துவருகிறது. இதற்கு, மத்திய அரசு துணை போவதும், இதை தட்டிக் கேட்க தமிழக அரசியல் கட்சிகள் முன்வராததும் விவசாயிகளுக்கு மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது.
கா்நாடக அரசின் முயற்சியை தோ்தல் ஆணையமும், மத்திய அரசும் தடுத்து நிறுத்த முன்வரவேண்டும். மறுக்கும் பட்சத்தில், உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும்.
தமிழக தோ்தல் பிரசாரம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என நாங்கள் கோரிக்கை வைத்துள்ளது குறித்து இதுவரை எந்த அரசியல் கட்சியும் வாய் திறக்காதது வேதனையளிக்கிறது என்றாா்.