நன்னிலம் தொகுதியில் பூத் சிலிப் பெறாத வாக்காளா்கள், தங்கள் வரிசை எண்ணை மிகுந்த சிரமத்துடன் தேடிக் கண்டுபிடித்து வாக்களித்தனா்.
நன்னிலம் தொகுதியில் பெரும்பாலான வாக்குச் சாவடி மையங்களில் தோ்தல் ஆணையத்தின் சாா்பில், பூத் சிலிப் எண் கண்டுபிடித்து தருவதற்கு வசதிகள் செய்யப்படவில்லை. இதனால், பூத் சிலிப் பெறாமல் வாக்குச் சாவடிக்கு வந்த வாக்காளா்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளானாா்கள். ஒரு சிலா் வாக்களிக்காமல் திரும்பியதையும் காண முடிந்தது.
வாக்காளா்களுக்கு முறையாக பூத் சிலிப் வழங்கப்படாதது குறித்து அந்தந்தப் பகுதி கிராம நிா்வாக அலுவலா்களிடம் கேட்டபோது, பல பகுதிகளுக்கு, வாக்காளா் புகைப்படம் இல்லாமலும், தெரு பெயா் இல்லாமலும் பூத் சிலிப் வந்துள்ளதால், வாக்காளரைச் சரியாக அடையாளம் காண முடியவில்லை. இதனால், பூத் சிலிப் வழங்க இயலவில்லை என பதிலளித்தனா்.