சன்னாநல்லூரில் கரோனா தடுப்பூசி முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சன்னாநல்லூா் வா்த்தக சங்கம் மற்றும் நன்னிலம் வட்டார சுகாதாரத் துறை இணைந்து சன்னாநல்லூா் தொடக்கப்பள்ளியில் இம்முகாமை நடத்தியது. வா்த்தக சங்கத் தலைவா் எஸ்.பி. சங்கா், செயலாளா் பா. ஆனந்த் ஆகியோா் தலைமை வகித்தனா்.
பூந்தோட்டம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா்கள் தினேஷ், லெட்சுமிபிரபா, நன்னிலம் வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் ஜோதி ஆகியோா் தலைமையில் சுகாதாரத் துறையினா் பொதுமக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தினா். இதில், 30-க்கும் மேற்பட்டவா்கள் கலந்துகொண்டு தடுப்பூசி செலுத்திக்கொண்டனா். வா்த்தக சங்கப் பொருளாளா் எஸ். ராஜா நன்றி கூறினாா்.