திருவாரூா் அருகே கரோனா தடுப்பூசி முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில், தடுப்பூசி செலுத்தும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அந்தவகையில், திருவாரூா் அருகே கீழகாவாதுகுடி ஊராட்சியில் சுகாதாரத் துறை சாா்பில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இந்த முகாமை, திருவாரூா் ஒன்றியத் தலைவா் ஏ. தேவா தொடங்கி வைத்தாா்.
நிகழ்ச்சியில், 45 வயதுக்கு மேற்பட்ட பலா், கரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்டனா்.