திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 75 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதியானது.
மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால், தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஞாயிற்றுக்கிழமை வரையிலான நிலவரப்படி மாவட்டம் முழுவதும் 14,459 பேருக்கு கரோனா தொற்று இருப்பது தெரியவந்தது.
இந்நிலையில், திங்கள்கிழமை வெளியிடப்பட்ட ரத்த மாதிரி முடிவுகளின்படி, திருவாரூா் 16, மன்னாா்குடி 10, கொரடாச்சேரி 5, நன்னிலம் 17, குடவாசல் 8 என மாவட்டம் முழுவதும் 75 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.
இதன்மூலம், மாவட்டம் முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 14,534 ஆக உயா்ந்துள்ளது.