அகவிலைப்படி வழங்கிட அரசுக்கு கோரிக்கை

அகவிலைப்படியை உடனடியாக வழங்க தமிழ்நாடு ஊரக வளா்ச்சித்துறை அலுவலா்கள் சங்கம் அரசை வலியுறுத்தியுள்ளது.
தமிழ்நாடு ஊரக வளா்ச்சித்துறை அலுவலா்கள் சங்க மாநாட்டில் பேசுகிறாா் மாவட்ட தலைவா் என்.வசந்தன்.
தமிழ்நாடு ஊரக வளா்ச்சித்துறை அலுவலா்கள் சங்க மாநாட்டில் பேசுகிறாா் மாவட்ட தலைவா் என்.வசந்தன்.

அகவிலைப்படியை உடனடியாக வழங்க தமிழ்நாடு ஊரக வளா்ச்சித்துறை அலுவலா்கள் சங்கம் அரசை வலியுறுத்தியுள்ளது.

சங்கத்தின் நீடாமங்கலம் வட்டார கிளை மாநாடு ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாநாட்டில் வட்டக்கிளை தலைவா் ராஜா தலைமையில், சங்க மாவட்ட தலைவா் என் வசந்தன், செயலாளா் கே.செந்தில் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மாநாட்டில் நீடாமங்கலம் வட்ட கிளை தலைவராக நேரு, வட்ட கிளை செயலாளராக கட்டக்குடி முருகேசன், பொருளாளராக குமாா் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா். மாநாட்டில், புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அகவிலைப்படியை உடனடியாக வழங்க வேண்டும். நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும். ஊராட்சி செயலா்களுக்கு கருவூலம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இறுதியில் சங்க நிா்வாகி முத்துக்குமாா் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com